மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாகர்கோவில்: நரிக்குறவர் குடும்பத்தை நடுவழியில் இறக்கிவிட்ட ஓட்டுநர், நடத்துநர் இடைநீக்கம்

நாகர்கோவிலில் பேருந்தில் தகராறில் ஈடுபட்ட நரிக்குறவர் குடும்பத்தை நடு வழியில் இறக்கி விட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

News image
கோப்புப்படம்
Updated On :10 டிசம்பர் 2021, 10:04 am

DIN

நாகர்கோவில்:  நாகர்கோவிலில் பேருந்தில் தகராறில் ஈடுபட்ட நரிக்குறவர் குடும்பத்தை நடு வழியில் இறக்கி விட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

நெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்த கணவன் - மனைவி மற்றும் 7 வயதுடைய குழந்தை என 3 பேர் கொண்ட நரிக்குறவர் குடும்பத்தினர் நாகர்கோவில், வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து வியாழக்கிழமை மாலை புறப்பட்ட அரசுப் பேருந்தில் ஏறினர்.

பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் கணவன் - மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பேருந்து நடத்துநர் கணவன் - மனைவி உள்பட 3 பேரையும் பேருந்திலிருந்து இறக்கி விட்டுள்ளார்.

மேலும் நரிக்குறவர் குடும்பத்தின் உடைமைகளையும் பேருந்திலிருந்து வெளியே தூக்கி வீசியுள்ளார். இந்த காட்சிகளை அங்கிருந்தவர்கள் விடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். இந்த பதிவு சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டது.

இதைத் தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் திருவட்டாறைச் சேர்ந்த நெல்சன் (45), நடத்துநர் ஜெயதாஸ் (44) ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து அரசுப் போக்குவரத்துக் கழக நாகர்கோவில் மண்டல பொது மேலாளர் அர்விந்த் வியாழக்கிழமை இரவு உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.