கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகம் கே. ஜி.சாவடி காவல் நிலைய சரகம் மகேந்திர மேடு, நவக்கரை அருகே உள்ள தங்கவேல் காட்டு
மூளை அருகில் மங்களூர்- சென்னை செல்லும் ரயில் வெள்ளிக்கிழமை இரவு சென்றபோது ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 25 வயதுடைய பெண் யானை மற்றும் அதனுடன் இரண்டு பெண் யானை குட்டிகள் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
இதுதொடர்பாக வனத்துறையினர், காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.