தமிழகத்தில் புதிதாக 740 பேருக்கு கரோனா தொற்று
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 740 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 11 பேர் உயிரிழந்தனர்.


தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 740 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 11 பேர் உயிரிழந்தனர்.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை சனிக்கிழமை (நவ.27) வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 740 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,24,731-ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க | ஒமிக்ரான் கரோனா பரவல்: பெண்கள் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி ஒத்திவைப்பு
கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்று பாதிப்பால் 11 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 36454ஆக உயர்ந்துள்ளது.
மேலும் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து 765 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 26,79,895ஆக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...