பெட்ரோல் விலை ரூ.102-ஐ தாண்டியது

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிப்பொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வரும் நிலையில், சென்னையில் வியாழக்கிழமை பெட்ரோல் விலை ரூ.102.10-ஐ தாண்டியது.
பெட்ரோல் விலை ரூ.102-ஐ தாண்டியது

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிப்பொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வரும் நிலையில், சென்னையில் வியாழக்கிழமை பெட்ரோல் விலை ரூ.102.10-ஐ தாண்டியது.

கடந்த 2017 -ஆம் ஆண்டு ஜூன் 17 முதல் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் மாற்றியமைத்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.

அதன்படி, பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் விநியோக நிறுவனங்கள் நாள்தோறும் எரிபொருள்களின் விலையை நிர்ணயிக்கின்றன. அதன்படி, காலை 6 மணி முதல் புதிய விற்பனை விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை ரூ.102.10-ஐ தாண்டி உள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் அதிகரிக்கப்பட்டு பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.102.10 ஆகவும், டீசல் லிட்டருக்கு 34 காசுகள் அதிகரிக்கப்பட்டு டீசல் ஒரு லிட்டர் ரூ.97.93 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது. 

தலைநகர் தில்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.104.79 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.93.52-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

இதுபோன்று மும்பையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.110.75 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.101.40 ஆகவும், கொல்கத்தாவில் ஒரு லிட்டர் ரூ.105.43 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.96.63 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com