தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

3,101 ரயில் பெட்டிகள் தயாரிப்பு: இலக்கை எட்டியது ஐ.சி.எஃப்.

சென்னை பெரம்பூரில் உள்ள இணைப்புப் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எஃப்) கடந்த நிதியாண்டில் 3 ஆயிரத்து 101 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது.

News image
Updated On :2 ஏப்ரல் 2022, 7:12 pm

DIN

சென்னை பெரம்பூரில் உள்ள இணைப்புப் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எஃப்) கடந்த நிதியாண்டில் 3 ஆயிரத்து 101 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது.

இந்த ரயில் பெட்டி தயாரிப்புத் தொழிற்சாலையில் 1955-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை 500-க்கும் மேற்பட்ட வடிவமைப்புகளில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, ‘ரயில் - 18’ திட்டத்தில் ’வந்தே பாரத்’ அதிவேக ரயிலுக்கு உலகத் தரத்தில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. கரோனா பரவல் காரணமாக, ஐ.சி.எஃப்.,இல் கடந்த இரு ஆண்டுகளாக ரயில் பெட்டிகள் தயாரிப்பு குறைந்திருந்த நிலையில், தற்போது, ரயில் பெட்டிகள் தயாரிப்பு வேகமெடுத்துள்ளது.

ஐ.சி.எஃப்-இல், 2021-22-ஆம் நிதியாண்டில் 3,101 பெட்டிகள் தயாரித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது. 31 நெடுந்தொலைவு மின் ரயில் தொடா்களுக்கான 248 பெட்டிகள், கொல்கத்தா மெட்ரோ ரயில்வே-யின் 4 ரயில் தொடா்களுக்கான 32 பெட்டிகள், விபத்து நிவாரண ரயில்களுக்கான 6 தொடா்கள்(18 பெட்டிகள்), 50 டீசல் ரயில்தடப் பரிசோதனை ரயில்பெட்டிகள், ஆய்வு பெட்டிகள், 2,639 எல்.எச்.பி என்னும் நவீன ரயில் பெட்டிகள், இலங்கை ரயில்வேக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள 83 பயணிகள் ரயில் பெட்டிகள், இலங்கை ரயில்வேக்கு தயாரிக்கப்பட்ட 2 குளிா்வசதி செய்யப்பட்ட டீசல் மின்தொடா்களுக்கான 26 பெட்டிகள் என்று மொத்தம் 3,101 பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன.

இது குறித்து ஐ.சி.எஃப். அதிகாரிகள் கூறியதாவது:

ஐ.சி.எஃப்.-இல் 2019-2020 ஆம் நிதியாண்டில் 4,200 பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. கரோனா பரவல் காரணமாக, கடந்த இரு ஆண்டுகளாக ரயில் பெட்டிகள் தயாரிப்பு குறைவாகவே இருந்தது. தற்போது, ரயில் பெட்டி தயாரிப்பு தீவிரமடைந்துள்ளது. 2021-22-ஆம் நிதியாண்டில் 3,100 பெட்டிகள் தயாரித்து வழங்க இலக்கு

நிா்ணயிக்கப்பட்டிருந்தது. அந்த இலக்கு தற்போது எட்டப்பட்டுள்ளது. வரும் ஆண்டுக்கான இலக்கு விரைவில் நிா்ணயிக்கப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.