பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ. நாளை ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாளை முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. 
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ. நாளை ஆர்ப்பாட்டம்
Published on
Updated on
1 min read

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாளை முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. 

இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுகளை எதிர்த்தும், மத்திய பாஜக அரசினை கண்டித்தும் நாளை (04.04.2022) தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்திட மதுரையில் நடைபெற்ற கட்சியின் 23வது மாநில மாநாடு அறைகூவல் விடுத்தது. 

இந்த அறைகூவலுக்கேற்ப நாளை (04.04.2022)  மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் காலை 10.00 மணிக்கு சென்னை, குறளகம் அருகே, பாரிமுனையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாவட்ட தலைவர்கள், தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com