சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

தமிழ் புத்தாண்டு: திருப்பூர் கோயில்களில் சிறப்பு பூஜை  

தமிழ் புத்தாண்டையொட்டி திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோயில், ஈஸ்வர சுவாமி கோவில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

News image

தமிழ் புத்தாண்டையொட்டி ரூபாய் நோட்டு அலங்காரத்தில் வியாழக்கிழமை பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் திருப்பூர் கோட்டை மாரியம்மன்

Updated On :14 ஏப்ரல் 2022, 11:07 am IST

திருப்பூர்: தமிழ் புத்தாண்டையொட்டி திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோயில், ஈஸ்வர சுவாமி கோவில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழ் புத்தாண்டையொட்டி திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோயில், அருள்மிகு விஸ்வேஸ்வர சுவாமி கோயில், ஈஸ்வரன் கோயில், கல்லூரி சாலையில் உள்ள ஐயப்பன் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் வியாழக்கிழமை அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருப்பூர் மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். 

Story image

ரூபாய் நோட்டு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் கோட்டை மாரியம்மன்

அதிலும் குறிப்பாக திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயிலில் ரூபாய் நோட்டுகளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல கல்லூரி சாலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் தமிழ் புத்தாண்டையொட்டி கனி காணும் நிகழ்வும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.