திருப்பூர்: தமிழ் புத்தாண்டையொட்டி திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோயில், ஈஸ்வர சுவாமி கோவில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழ் புத்தாண்டையொட்டி திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோயில், அருள்மிகு விஸ்வேஸ்வர சுவாமி கோயில், ஈஸ்வரன் கோயில், கல்லூரி சாலையில் உள்ள ஐயப்பன் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் வியாழக்கிழமை அதிகாலை முதலே சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருப்பூர் மாநகரில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

ரூபாய் நோட்டு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் கோட்டை மாரியம்மன்
அதிலும் குறிப்பாக திருப்பூர் தாராபுரம் சாலையில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயிலில் ரூபாய் நோட்டுகளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல கல்லூரி சாலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் தமிழ் புத்தாண்டையொட்டி கனி காணும் நிகழ்வும் நடைபெற்றது.
இதையும் படிக்க | குரு பெயர்ச்சி விழா: திட்டை கோயிலில் திரண்ட பக்தர்கள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் நாளை வைகாசி விசாகத் திருவிழா

சங்ககிரி சா்வசித்தி மாரியம்மன் கோயில் பொங்கல் விழா

ஒசூா் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழா: பக்தா்கள் அலகு குத்தி வழிபாடு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



