கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

‘கொடநாடு எஸ்டேட் எங்களுக்கு கோயில்’: சசிகலா அறிக்கை

கொடநாடு எஸ்டேட் தனக்கு கோயில் போன்றது எனவும், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News image

சசிகலா

Updated On :22 ஏப்ரல் 2022, 1:05 pm

DIN

கொடநாடு எஸ்டேட் தனக்கு கோயில் போன்றது எனவும், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிடம் இரண்டு நாள்களாக விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்றும், இன்றும் நடைபெற்று வரும் விசாரணையில் வழக்கு தொடர்பாக பல்வேறு கேள்விகளுக்கு சசிகலா பதிலளித்தார். 

இந்நிலையில் வெள்ளிக்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ள சசிகலா, கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்திற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், காவல்துறையின் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள சசிகலா கொடநாடு எஸ்டேட் என்பது மற்றவர்களுக்கு வேண்டுமானால் ஒரு சாதாரண இடமாக இருக்கலாம் என்றும், ஆனால் தன்னைப் பொருத்தவரை ஒரு கோயில் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த சம்பவத்தில் தங்களது உயிரை இழந்தவர்களின் மரணத்திற்கு நீதி கிடைத்திட வேண்டும் எனவும் சசிகலா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.