இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழையினால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 2 லட்சம் கன அடிக்கு மேல் கூடுதலான உபரிநீர் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் வரலாறுகாணாத வகையில் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளநீர் சீறிப் பாய்கிறது. இதனால் கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கரையோர கிராமங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது. கொள்ளிடம் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டு, சிதம்பரம், காட்டுமன்னார்குடி பகுதிகளில் திட்டக்காட்டுர், கீழகுண்டலபாடி, அக்கரை ஜெயங்கெண்டபட்டினம், ஜெயங்கொண்ட பட்டினம், வீரன்கோவில் திட்டு, பெரியக்காரமேடு, சிக்காரமேடு, கீழப்பெரும்பை, சிந்தாம்பாளையம், இளந்திரமேடு, தெற்கு பிச்சாவரம் உள்ளிட்டு பல கிராமங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. ஏராளமான பொதுமக்கள் புயல் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.