மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாமக்கல் அருகே விஷ வண்டுகள் கடித்து 3 பேர் காயம்: அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

நாமக்கல் அருகே விஷ வண்டுகள் கடித்ததில் தேசிய வேலையளிப்பு திட்டத்தில் பணியாற்றிய மூன்று பெண்கள் பலத்த காயமடைந்தனர்.

News image
விஷ வண்டுகள் கடித்ததில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் நாமக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 
Updated On :12 ஆகஸ்ட் 2022, 8:55 am

DIN

நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல்: நாமக்கல் அருகே விஷ வண்டுகள் கடித்ததில் தேசிய வேலையளிப்பு திட்டத்தில் பணியாற்றிய மூன்று பெண்கள் பலத்த காயமடைந்தனர்.

நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம் மருக்கலாம்பட்டி ஊராட்சியை சேர்ந்த சுமதி, பாப்பாத்தி, ஸ்ரீரங்கம்மாள் உள்ளிட்ட 30 பேர் அப்பகுதியில் உள்ள ஏரி பகுதியில் சீமை கருவேல மரங்களை வெட்டும் பணியில் வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மரத்தில் இருந்த விஷ வண்டுகள் கலைந்து தொழிலாளர்களை கடுமையாக தாக்கியது. 

Story image

விஷ வண்டுகள் கடித்ததில் பாதிக்கப்பட்ட ஸ்ரீரங்கம்மாள்

இதில், சுமதி, பாப்பாத்தி, ஸ்ரீரங்கம்மாள் ஆகியோர் மட்டும் வண்டுகளின் பலத்த தாக்குதலுக்கு உள்ளாகினர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு மூன்று பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.