பேருந்துகளில் விளம்பரம் மூலம் வருவாயைப் பெருக்க திட்டம்

தமிழகத்தில் அரசு மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் விளம்பரம் செய்து வருவாயைப் பெருக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

சென்னை: தமிழகத்தில் அரசு மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் விளம்பரம் செய்து வருவாயைப் பெருக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக சென்னையில் மாநரகப் பேருந்துகளில் பல்வேறு வகையான விளம்பரங்களை செய்து வருவாயைப் பெருக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பேருந்தில் ஓட்டுநர் மற்றும் பயணிகளின் இருக்கைக்குப் பின்புறம் காலியாக உள்ள இடங்களில் விளம்பரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலியாக இருக்கும் இடங்களில் எல்இடி ஸ்க்ராலிங் போர்டு மற்றும் வெளிப்புற கூண்டு தகடுகளை வைத்து விளம்பரம் செய்யவும், முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com