கோப்புப் படம்
கோப்புப் படம்

2ம் நிலை காவலர் தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
Published on

தமிழக காவல் துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஒரு காலி பணியிடத்திற்கு 5 பேர் வீதம் அடுத்த கட்ட உடற்தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக காவல் துறை, சிறைத் துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட துறைகளுக்கான இரண்டாம் நிலை மற்றும் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு முறையை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது.இதற்கான அறிவிப்பு ஜூன் 30 தேதி வெளியானது. 

இந்த பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன், தேவை உடற்தகுதியும் பெற்றிருக்க வேண்டும். அந்தவகையில், கடந்த மாதம் 27ஆம் தேதி தமிழகம் முழுவதும் 295 மையங்களில் எழுத்துத் தேர்வு  நடைபெற்றது. 

அந்த தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. ஒரு காலி பணியிடத்திற்கு 5 பேர் வீதம் அடுத்த கட்ட உடற்தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com