எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

தம்மம்பட்டி சிவன் கோயிலில் கொள்ளை முயற்சி! கொள்ளையர்களுக்கு போலீஸ் வலை!!

தம்மம்பட்டி சிவன் கோயிலின், வாயிற் கதவின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற முகமூடி கொள்ளையர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 4:42 pm IST

தம்மம்பட்டி: தம்மம்பட்டி சிவன் கோயிலின், வாயிற் கதவின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற முகமூடி கொள்ளையர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேருந்து நிலையம் பின்புறம், சுவேநதியையொட்டி, 700 ஆண்டுகள் பழைமையான காசி விசுவநாதர் சிவன் கோயில் உள்ளது. இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில், சில நாட்களாக சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடைபெறுகிறது. அதற்காக தினமும் ஏராளமான தொழிலாளர்கள் கட்டுமானப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு முகமூடி அணிந்து வந்த இரண்டு நபர்கள், கோயிலின் முன்புறம் உள்ள இரண்டு சிசிடிவி கேமிராக்களின் வயர்களை துண்டித்துவிட்டு, வாயி்ற்கதவின் பூட்டை உடைத்து கோயிலுக்குள் நுழைந்தனர். உள்பிரகாரத்திற்குள் செல்லும் வாயிற்கதவு ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் போடப்பட்டுள்ளதால், அதன் பூட்டை கடப்பாறை கம்பியால் உடைத்து அந்த கதவைத் திறக்க முயன்றுள்ளனர்.

அப்போது கதவை திறக்க முடியாததால், கோயில் வெளிப் பிரகாரத்தை கடப்பாறையுடன் சுற்றி வந்துள்ளனர். சாமி சிலைகள் இருக்கும் பிரகாரத்திற்குள் நுழைய முடியாததால், பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றனர். முகமூடி கொள்ளையர்கள் கடப்பாறையுடன் கோயிலுக்குள் சுற்றிவரும் காட்சி, கோயிலுக்குள் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து, தம்மம்பட்டி சிவன் கோயில் திருப்பணிக்குழு தலைவரும், தி.மு.க. நகர செயலாளருமான வி.பி.ஆர்.ராஜா மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் ரமேஷ், நடராஜ்,  கலியவரதராஜி, பழனிமுத்து, திருச்செல்வன் உள்ளிட்டோர் அறநிலையத்துறை செயல்அலுவலர் மற்றும், தம்மம்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அ

தன்பேரில்,  தம்மம்பட்டி காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான போலீசார், கோயில் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து, கடந்த 10 நாட்களாக கோயிலுக்கு வந்து சென்றவர்கள், சிசிடிவி கேமிராவில் பதிவானர்களின் உருவங்களுடன் ஒத்துப்போகிறதா என தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.