மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தம்மம்பட்டி சிவன் கோயிலில் கொள்ளை முயற்சி! கொள்ளையர்களுக்கு போலீஸ் வலை!!

தம்மம்பட்டி சிவன் கோயிலின், வாயிற் கதவின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற முகமூடி கொள்ளையர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News image
Updated On :28 டிசம்பர் 2022, 8:46 am

DIN

தம்மம்பட்டி: தம்மம்பட்டி சிவன் கோயிலின், வாயிற் கதவின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற முகமூடி கொள்ளையர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி பேருந்து நிலையம் பின்புறம், சுவேநதியையொட்டி, 700 ஆண்டுகள் பழைமையான காசி விசுவநாதர் சிவன் கோயில் உள்ளது. இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில், சில நாட்களாக சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடைபெறுகிறது. அதற்காக தினமும் ஏராளமான தொழிலாளர்கள் கட்டுமானப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு முகமூடி அணிந்து வந்த இரண்டு நபர்கள், கோயிலின் முன்புறம் உள்ள இரண்டு சிசிடிவி கேமிராக்களின் வயர்களை துண்டித்துவிட்டு, வாயி்ற்கதவின் பூட்டை உடைத்து கோயிலுக்குள் நுழைந்தனர். உள்பிரகாரத்திற்குள் செல்லும் வாயிற்கதவு ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் போடப்பட்டுள்ளதால், அதன் பூட்டை கடப்பாறை கம்பியால் உடைத்து அந்த கதவைத் திறக்க முயன்றுள்ளனர்.

அப்போது கதவை திறக்க முடியாததால், கோயில் வெளிப் பிரகாரத்தை கடப்பாறையுடன் சுற்றி வந்துள்ளனர். சாமி சிலைகள் இருக்கும் பிரகாரத்திற்குள் நுழைய முடியாததால், பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றனர். முகமூடி கொள்ளையர்கள் கடப்பாறையுடன் கோயிலுக்குள் சுற்றிவரும் காட்சி, கோயிலுக்குள் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து, தம்மம்பட்டி சிவன் கோயில் திருப்பணிக்குழு தலைவரும், தி.மு.க. நகர செயலாளருமான வி.பி.ஆர்.ராஜா மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் ரமேஷ், நடராஜ்,  கலியவரதராஜி, பழனிமுத்து, திருச்செல்வன் உள்ளிட்டோர் அறநிலையத்துறை செயல்அலுவலர் மற்றும், தம்மம்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அ

தன்பேரில்,  தம்மம்பட்டி காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான போலீசார், கோயில் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து, கடந்த 10 நாட்களாக கோயிலுக்கு வந்து சென்றவர்கள், சிசிடிவி கேமிராவில் பதிவானர்களின் உருவங்களுடன் ஒத்துப்போகிறதா என தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.