
மதுரை : தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்துமாறு உத்தரவிடக் கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அரசு அலுவலகங்களில் சிசிடிவி கேமரா பொருத்தக் கோரிய மதுரையைச் சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த பொது நலன் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, இரண்டு ஆண்டுகளுக்கு ரமேஷ் வழக்குத் தொடரவும் தடை விதித்து உத்தரவிட்டது.
இதையும் படிக்க.. தடாலடியாக இப்படிச் செய்ய வேண்டாம்: எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு
மேலும், ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான அரசு அதிகாரிகளின் சொத்துக்களை முடக்கக் கோரிய கே.கே. ரமேஷின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
பொது நல வழக்குகளை முறையாகத் தாக்கல் செய்ய வில்லை. விளம்பரத்துக்காக பொது நல வழக்குகள் தொடரப்படுவதாகக் கூறி ரமேஷுகு 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.