முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

சுருளி அருவிக்கு அனுமதி: நீர்வரத்து இல்லாததால் பயணிகள் ஏமாற்றம்

தேனி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான சுருளி அருவி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை  திறக்கப்பட்டது.  

News image
நீர்வரத்து குறைந்த சுருளி அருவி
Updated On :2 பிப்ரவரி 2022, 8:55 am

DIN


கம்பம்: தேனி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான சுருளி அருவி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை  திறக்கப்பட்டது.   அருவியில் நீர்வரத்து இல்லாததால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

கரோனா தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் அடைக்கப்பட்டன, இதில் தேனி மாவட்டத்தில் புகழ் பெற்ற  சுற்றுலாத்தலமான சுருளி அருவியும் ஒன்று.

இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு சுற்றுலாத்தலமான சுருளி அருவி புதன்கிழமை திறக்கப்பட்டது.

சுருளி அருவி, ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ளதால், கம்பம் கிழக்கு வனச்சரகத்தினர் அருவிக்கு வருகின்ற சுற்றுலா பயணிகளை வெப்ப அனலைசர் கருவி மூலம் உடற்பரிசோதனை செய்தும், சனிடைசர் கொடுத்தும் சுருளி அருவி பகுதிக்கு அனுப்பிவத்தனர்.

Story image

நுழைவு கட்டணமாக ரூபாய் 30 வசூலிக்கப்பட்டது,  5 வயதுக்கு குறைந்தவர்களுக்கு கட்டணம் இல்லை, வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.

தற்போது கோடைகால தொடக்கம் ஆவதால், சுருளி அருவி என் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யாததால் சுருளி அருவிக்கு நீர்வரத்து இல்லை.

இதனால் சுருளி அருவிக்கு குளிக்க சென்ற சுற்றுலா பயணிகள் அருவியில் நீர்வரத்து இல்லாததால் ஏமாற்றம் அடைந்து திரும்பினர்.

இதுபற்றிய கிழக்கு வனச்சரக அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, சுருளி அருவியில் நீர் பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் நீர்வரத்து இல்லை.

ஆனால், அதே நேரத்தில் சுருளி அருவியில், பகுதிகளுக்குள் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கரோனா பரவல் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.