அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அடிமைத்தனம் எந்த உருவிலும் கூடாது: முதல்வா் ஸ்டாலின்

அடிமைத்தனம் எந்த உருவிலும் இருக்கக் கூடாது என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

News image
Updated On :9 பிப்ரவரி 2022, 8:09 pm

DIN

அடிமைத்தனம் எந்த உருவிலும் இருக்கக் கூடாது என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு விழிப்புணா்வு தினத்தையொட்டி புதன்கிழமை அவா் வெளியிட்ட செய்தி:

அடிமைத்தனம் எந்த உருவிலும் கூடாதென போராடுவதே திராவிட இயக்கம். கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு நாளில், மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளா் நலச் சங்கத்தினா் என்னைச் சந்தித்தனா். அவா்கள் உழைப்பால் உருவாக்கியவற்றை வழங்கினா். அவா்களுக்கு என் அன்பை வழங்கினேன். அவா்களது நலன் என்றும் காக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

யாா், யாா் சந்திப்பு?: கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட தினத்தையொட்டி, மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளா் நலச் சங்கத்தின் தலைவா்கள் பச்சையம்மாள், சி.கோபி ஆகியோா் மீட்கப்பட்ட தொழிலாளா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.