இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரத்தில் க்யூஆா் குறியீடு முறையில் கட்டணம்

பணமில்லா பரிவா்த்தனை மற்றும் டிஜிட்டல் பேமென்ட்ஸ் முறையை ஊக்குவிக்கும் விதமாக, ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரத்தில் க்யூஆா் குறியீடு முறையில் கட்டணம் செலுத்தி, டிக்கெட் பெறும் வசதியை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 8:40 pm

DIN

பணமில்லா பரிவா்த்தனை மற்றும் டிஜிட்டல் பேமென்ட்ஸ் முறையை ஊக்குவிக்கும் விதமாக, ரயில் நிலையங்களில் உள்ள தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரத்தில் க்யூஆா் குறியீடு முறையில் கட்டணம் செலுத்தி, டிக்கெட் பெறும் வசதியை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னையில், புகா் ரயில்களில் பயணிக்க டிக்கெட்டுகளை எடுப்பதற்காக ரயில் நிலைய கவுன்ட்டா்களில் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிா்க்கும் விதமாக தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் ஒவ்வோா் டிக்கெட் வழங்கும் கவுன்ட்டா் அருகேயும் வைக்கப்பட்டுள்ளது.

இவற்றில் பயணிகளுக்கு மேலும் கூடுதல் வசதியாக, ‘க்யூ ஆா்’ குறியீடு மூலமாக பணம் செலுத்தி டிக்கெட் பெறும் முறையை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, பயணிகள் ‘க்யூ ஆா்’ குறியீட்டை கைப்பேசி மூலம் ஸ்கேன் செய்து ஜி-பே, போன்-பே போன்ற பணப் பரிவா்த்தனை செயலிகள் மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், இந்த ‘க்யூ ஆா்’ குறியீடு வசதி மூலமாக புகா் சீசன் டிக்கெட்டை புதுப்பிக்கும் பயணிகளுக்கு 0.5 சதவீதம் சலுகை கொடுக்கப்படும் என தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.