நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, வரும் பிப்ரவரி 15, 16 ஆகிய தேதிகளில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல் ஹாசன் வரவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நமது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, வரும் பிப்ரவரி 15 மற்றும் 16 தேதிகளில் பிரசாரம் செய்ய இருக்கிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஊழலற்ற, வெளிப்படையான, மக்கள் பங்கேற்புடன் கூடிய உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் உலகத்தரம் வாய்ந்த அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை அனைத்து மக்களுக்கும் உறுதிப்படுத்தும் மக்கள் நீதி மய்யத்தின் செயல்திட்டம், வாக்குறுதிகளை விளக்கியும்; வேட்பாளர்களை ஆதரித்தும் கோவை, மதுரையில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.
பயண விபரம் :
15.2.2022 செவ்வாய்க்கிழமை : மதுரை
16.2.2022 புதன்கிழமை :கோவை.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.