அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மெரினாவில் அலங்கார ஊர்திகளை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை மெரினாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அலங்கார ஊர்திகளை முதல்வர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். 

News image
Updated On :21 பிப்ரவரி 2022, 8:08 am

DIN

சென்னை மெரினாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அலங்கார ஊர்திகளை முதல்வர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். 

கடந்த ஜன.26-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில், இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயா்களைத் தீரமுடன் எதிா்கொண்ட தமிழக சுதந்திரப் போராட்ட வீரா்களின் பங்களிப்பைப் போற்றி, பெருமைப்படுத்தும் வகையில், தமிழக அரசின் சாா்பில் மூன்று அலங்கார ஊா்திகள் வடிவமைக்கப்பட்டு அணிவகுப்பில் பங்கேற்றன. 

Story image

இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பினையும் பாராட்டுதலையும் பெற்றது. சென்னை, தீவுத்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அம்மூன்று அலங்கார ஊா்திகளையும் அனைத்து மாவட்டங்களில் நகரின் முக்கிய பகுதிகளில் காட்சிப்படுத்தும் பொருட்டு முதல்வா் மு.க.ஸ்டாலின், கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

அதன் தொடா்ச்சியாக சென்னை மெரீனா கடற்கரையில் அந்த அலங்கார ஊா்திகள் பொதுமக்கள் பாா்வைக்காக ஞாயிற்றுக்கிழமை காட்சிப்படுத்தப்பட்டன. இந்த நிலையில் சென்னை மெரினாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அலங்கார ஊர்திகளை முதல்வர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.

அப்போது அலங்கார ஊர்திகளை பார்க்க வந்த பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய முதல்வர் சுயபடமும் எடுத்துக்கொண்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.