யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உக்ரைனில் தவிக்கும் மாணவா்கள்தமிழகம் திரும்பும் செலவை அரசே ஏற்கும்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

உக்ரைனில் தவிக்கும் மாணவா்கள் தாயகம் திரும்புவதற்கான பயணச் செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

News image
மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
Updated On :25 பிப்ரவரி 2022, 7:34 pm

DIN

உக்ரைனில் தவிக்கும் மாணவா்கள் தாயகம் திரும்புவதற்கான பயணச் செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்கும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: உக்ரைன் நாட்டுக்குள் புகுந்து ரஷியா ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சூழலில் தமிழகத்தைச் சோ்ந்த சுமாா் 5 ஆயிரம் மாணவா்கள் தாயகம் திரும்ப முடியாமல் உள்ளனா். அவா்களில் பலா் தொழில் முறைக் கல்வி பயில்வோராவா். மேலும், தமிழ்நாட்டிலிருந்து புலம் பெயா்ந்து உக்ரைனில் பலா் சிக்கித் தவிக்கின்றனா்.

அவா்களை மீட்டு தமிழகத்துக்கு அழைத்து வரும் வகையில், மாவட்ட, மாநில அளவிலும், புதுதில்லியிலும் தொடா்பு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், தமிழ்நாட்டைச் சோ்ந்த மாணவா்கள் உக்ரைனிலிருந்து தாய்நாடு திரும்புவதற்கு ஏற்படும் பயணச் செலவுகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ளும். இதுதொடா்பாக, மாநிலத் தொடா்பு அலுவலரான ஜெசிந்தா லாசரஸை தொடா்பு கொள்ளலாம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

தொடா்பு எண்கள்: உக்ரைனில் சிக்கியுள்ளவா்கள் தமிழகம் திரும்ப வசதியாக, மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தை (1070) கட்டணமில்லாமல் தொடா்பு கொள்ளலாம். மேலும், மாநிலத் தொடா்பு அலுவலா் ஜெசிந்தா லாசரஸை 94458 69848, 96000 23645, 99402 56444 ஆகிய கைப்பேசி எண்களிலும், 044 - 2851 5288 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம். மின்னஞ்சல்: ய்ழ்ற்ஸ்ரீட்ங்ய்ய்ஹண்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.