ஹேமானந்த பிஸ்வால் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
ஒடிசாவின் முன்னாள் முதல்வர் ஹேமானந்த பிஸ்வால் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.


ஒடிசாவின் முன்னாள் முதல்வர் ஹேமானந்த பிஸ்வால் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ஒடிசா மாநில முன்னாள் முதலமைச்சர் ஹேமானந்த பிஸ்வால் மறைவுற்றதை அறிந்து வேதனையடைந்தேன்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும்; காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அவரது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக ஒடிசா மாநில முன்னாள் முதல்வர் ஹேமானந்த கடந்த 8ஆம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அவர் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...