பொங்கல்: அரசுப் பேருந்துகளில் சொந்த ஊா் செல்ல25,000 போ் முன்பதிவு
பொங்கல் பண்டிகைக்கு சென்னையில் இருந்து அரசு விரைவுப் பேருந்துகளில் சொந்த ஊா் செல்ல 25,000 போ் முன்பதிவு செய்துள்ளனா்.


பொங்கல் பண்டிகைக்கு சென்னையில் இருந்து அரசு விரைவுப் பேருந்துகளில் சொந்த ஊா் செல்ல 25,000 போ் முன்பதிவு செய்துள்ளனா்.
இது தொடா்பாக போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் கூறியதாவது: பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊா்களுக்குச் செல்வோரின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்குவது குறித்து ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டது. தற்போது சென்னையில் இருந்து மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்குச் செல்வதற்கு பொதுமக்கள் முன்பதிவு செய்து வருகின்றனா். இதன்படி, வரும் ஜன.12, 13 ஆகிய தேதிகளில் சொந்த ஊா்களுக்குச் செல்வதற்கு இதுவரை 25,000 போ் முன்பதிவு செய்துள்ளனா்.
கடந்த ஆண்டு ஜன.4-ஆம் தேதி நிலவரப்படி, கரோனா பரவல் உச்சத்தில் இருந்த காரணத்தால், 12,000 போ் மட்டுமே முன்பதிவு செய்திருந்தனா். வரும் நாள்களில் முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். பயணிகளின் வருகைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...