புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பகலில் வெயில் கொளுத்தினால்.. தமிழ்நாடு வெதர்மேன் சொல்லும் தகவல்

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கடந்த ஒரு சில நாள்களாக இரவு நேரத்தில் பலத்த மழை முதல் கனமழை பெய்து வருகிறது.

News image
பகலில் வெயில் கொளுத்தினால்.. தமிழ்நாடு வெதர்மேன் சொல்லும் தகவல்
Updated On :1 ஜூலை 2022, 8:09 am

DIN

சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கடந்த ஒரு சில நாள்களாக இரவு நேரத்தில் பலத்த மழை முதல் கனமழை பெய்து வருகிறது.

வியாழக்கிழமை இரவு சென்னையின் பல பகுதிகளிலும், புறநகர்ப் பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது.

அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர், அண்ணாநகர் உள்ளிட்ட சென்னை மற்றும் சென்னையின் புறநகர்ப் பகுதிகளிலும் கனமழை பெய்தது.

இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருப்பதாவது, சென்னையில் நேற்று பல்வேறு பகுதிகளில் பலத்தமழை பெய்துள்ளது.

மழை நிலவரம்
வில்லிவாக்கம் - 62 மில்லி மீட்டர்
வண்ணாரப்பேட்டை - 51 மில்லி மீட்டர்
வியாசார்பாடி - 45 மில்லி மீட்டர்
நுங்கம்பாக்கம் - 37 மில்லி மீட்டர்
மாதவரம் - 35 மில்லி மீட்டர்
புழல் - 30 மில்லி மீட்டர்
காஞ்சிபுரம் - 17 மில்லி மீட்டர்
வானகரம் - 10 மில்லி மீட்டர்
பொத்தேரி - 8 மில்லி மீட்டர்
செவ்வாய்பேட்டை - 8 மில்லி மீட்டர்

வரும் நாள்களிலும், பகலில் நல்ல வெயில் கொளுத்தும்பட்சத்தில் இரவில் மழை பெய்யும். ஒரு வேளை உங்கள் பகுதியில் மழை பெய்யாவிட்டால், மறுநாள் நிச்சயம் பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.