குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

ஆனி மாத பெளர்ணமி: சுருளிமலை சுருளிநாதருக்கு முக்கனி பூஜை

தேனி மாவட்டம் சுருளிமலை சுருளிநாதருக்கு ஆனி மாத பெளர்ணமியை முன்னிட்டு முக்கனி  பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :13 ஜூலை 2022, 2:42 pm IST

தேனி மாவட்டம் சுருளிமலை சுருளிநாதருக்கு ஆனி மாத பெளர்ணமியை முன்னிட்டு முக்கனி  பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி மலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயில் வளாகத்தில் தென்கைலாய நாதர் என்ற சுருளி நாதர் கோயில் உள்ளது. ஆனி மாதம் புதன்கிழமையன்று  பௌர்ணமி நாளாததால்  மா, பலா, வாழை என முக்கனியை தென்கைலாய நாதருக்கு படைத்து சிறப்புப் பூஜை, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. முக்கனிகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. பூஜைகளை கணேஷ் திருமேனி செய்தார்.

அருகே உள்ள கைலாசநாதர் குகை கோயிலில் பெளர்ணமி தினத்தை முன்னிட்டு ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் பாத யாத்திரையாக சென்று சுருளி தீர்த்தத்தில் நீராடி, தீர்த்தத்தை குலதெய்வ கோயில்களுக்கு கொண்டு சென்றனர், அன்னதானமும் நடைபெற்றது. அருகில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோயிலிலும் பெளர்ணமி தின பூஜை நடைபெற்றது, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 

கம்பம் காசிவிசுவநாத சுவாமி கோயிலில் பெளர்ணமி தின சிறப்புப் பூஜை நடைபெற்றது, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.