பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

கூத்தாநல்லூர்: பெரியப்பள்ளி வாயில் நிர்வாகக் குழு தேர்தலுக்கு 31 பேர் வேட்புமனு

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பெரியப் பள்ளி வாயில் நிர்வாகக் குழு தேர்தலுக்கு 31 பேர் செவ்வாய்க்கிழமை வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

Published On :

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பெரியப் பள்ளி வாயில் நிர்வாகக் குழு தேர்தலுக்கு 31 பேர் செவ்வாய்க்கிழமை வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

கூத்தாநல்லூர் பெரியப் பள்ளி வாயில் தேர்தலை நடத்தி, புதிய நிர்வாகக் குழுவைத் தேர்ந்தெடுக்க, தமிழ்நாடு வக்பு வாரியம் ஆணையிட்டுள்ளது. அதன்படி, தஞ்சாவூர் சரக வக்பு வாரிய கண்காணிப்பாளரும், தேர்தல் அதிகாரியுமான டிஓபி தாரிக், தேர்தலை நடத்த உத்தரவிட்டார்.

அதன்படி, இன்று 19ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை, பெரியப்பள்ளி வாயில், பரக்கத்துல்லா ஹாலில் காலை 11 மணிக்கு வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது.

15 பேர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பெரியப் பள்ளி வாசல் நிர்வாகக் குழுவுக்கு 31 பேர், தஞ்சாவூர் சரக வக்பு வாரிய கண்காணிப்பாளரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான டிஓபி தாரிக் கிடம்,வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

Story image

இந்தத் தேர்தலில், பெரியப் பள்ளிவாசலின் நிர்வாகிகளான, தலைவர் என்.எம்.ஏ. சிஹாபுதீன், செயலாளர் ஜே.எம்.ஏ.ஷேக் அப்துல் காதர், ஆர்.ஏ.அப்துல் கரீம், எல்.பீ.மைதீன், கே.ஏ.முகம்மது இஸ்மாயில் உள்ளிட்ட 7 பேர் மீண்டும் போட்டியிடுகிறார்கள்.

24 பேர் புதியவர்களாக போட்டியிடுகிறார்கள். இதில், நகரின் பிரமுகர்கள் நாட்டாண்மை என அழைக்கக் கூடிய ஹாஜா பகுருதீன், நா.அ. அன்சார்தீன், நகர மன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.ஹாஜா நஜ்முதீன் உள்ளிட்ட 24 பேர் புதிய வேட்பாளர்கள் ஆவார்கள்.

வேட்பு மனுத்தாக்கல் பணிகளை வக்பு வாரிய ஆய்வாளர் ம.சாதிக் கவனித்தார். வரும் 21 ஆம் தேதி வேட்பு மனு பரிசீலனை செய்யப்பட்டு, வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. 23 ஆம் தேதி, வேட்பு மனு திரும்பப் பெறப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. 31 ஆம் தேதி, ஜாமியாத் தொடக்கப் பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

சின்ன சிங்கப்பூர் என அழைக்கப்படும் கூத்தாநல்லூர் பெரியப் பள்ளிவாயில் நிர்வாகக் குழு தேர்தலை , கூத்தாநல்லூரைச் சேர்ந்த வெளிநாடுகளில் வசிப்பவர்கள் உள்ளிட்ட அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும், பரபரப்பான தேர்தலாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.