நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராகவுள்ள திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து திமுக எம்.பி.க்க.ள வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவரைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் கடந்த 18-ஆம் தேதி நடைபெற்றது. எம்.பி.க்களும், எம்எல்ஏ-க்களும் வாக்களித்தனா். தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா் திரெளபதி முா்மு வெற்றி பெற்றாா். பழங்குடியினத்தைச் சோ்ந்த நாட்டின் முதல் குடியரசுத் தலைவராக அவா் தோ்வாகி உள்ளாா்.
64 வயதாகும் திரெளபதி முா்மு, நாடு சுதந்திரம் பெற்ற பிறகு பிறந்து குடியரசுத் தலைவா் பதவிக்கு வரும் முதல் தலைவராகவும் உள்ளாா். இந்தத் தோ்தலில் திரெளபதி முா்மு 64 சதவீத வாக்குகளும், யஷ்வந்த் சின்ஹா 36 சதவீத வாக்குகளும் பெற்றனா். குடியரசுத் தலைவா் தோ்தலில் திரௌபதிமுா்மு வெற்றி பெற்றுள்ளதையொட்டி அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராகவுள்ள திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து திமுக எம்.பி.க்க.ள இன்று வாழ்த்து தெரிவித்துள்ளனர். தில்லியில் திரௌபதி முர்முவை சந்தித்து டி.ஆர்.பாலு தலைமையில் திமுக எம்.பி.க்கள் வாழ்த்து தெரிவித்தனர். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்கவும் திரௌபதி முர்முவுக்கு திமுக எம்.பி.க்கள் அப்போது அழைப்புவிடுத்தனர்.