சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

எட்டுக்குடி முருகன் கோயில்: ஆடி கிருத்திகை சிறப்பு வழிபாடு

திருக்குவளை அருகே பிரசித்தி பெற்ற எட்டுக்குடி முருகன் திருக்கோயிலில் ஆடி‌ மாத கிருத்திகையையொட்டி முன்னிட்டு சிறப்பு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் சனிக்கிழமை நடைபெற்றது.

News image

 முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும் எட்டுக்குடி முருகன்

Updated On :23 ஜூலை 2022, 7:08 am

DIN

திருக்குவளை அருகே பிரசித்தி பெற்ற எட்டுக்குடி முருகன் திருக்கோயிலில் ஆடி‌ மாத கிருத்திகையையொட்டி முன்னிட்டு சிறப்பு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் சனிக்கிழமை நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையை அடுத்த எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடை வீடு என அழைக்கப்படும்  பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரம் அன்று சிறப்பு வழிபாடுகள் விமர்சையாக  நடைபெறுவது வழக்கம். குறிப்பாக ஆடி மாத  கிருத்திகையான சனிக்கிழமை 4 கால சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. 

Story image

சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள்.

முன்னதாக பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து காலை முதலே ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Story image

எட்டுக்குடி முருகன் கோயில் குளம்

பக்தர்களின் வருகையை முன்னிட்டு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு தரிசனத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை இரவு 8 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் சிறப்பு வீதியுலா காட்சியும் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.