சென்னை அருகே புதிய விமான நிலையம்: இன்று முடிவு

சென்னை அருகே புதிய விமான நிலையம் அமையப் போகும் இடம் இன்று இறுதி செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோப்புப்டம்
கோப்புப்டம்
Published on
Updated on
1 min read

சென்னை: சென்னை அருகே புதிய விமான நிலையம் அமையப் போகும் இடம் இன்று இறுதி செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை அருகே புறநகர் பகுதியில் புதிதாக விமான நிலையம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதற்கான இடம் தேர்வு செய்வதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது.

இதற்கிடையே, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் பன்னூர் ஆகிய இடங்களை ஆய்வு செய்த இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் குழு விமான நிலையம் அமைக்க உகந்த இடங்களாக தேர்வு செய்தது.

தில்லியில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சருடன் அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தக் கூட்டத்தின் முடிவில், விமான நிலையம் அமையப் போகும் இடம் இன்று இறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com