திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

அதிமுக விவகாரத்தில் பாஜக தலையீடு இல்லை: பண்ருட்டி ராமச்சந்திரன்

அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதாகக் கூறுவது தவறான தகவல் என்று அதிமுக மூத்த தலைவா் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2022, 8:02 am IST

அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுவதாகக் கூறுவது தவறான தகவல் என்று அதிமுக மூத்த தலைவா் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

எம்ஜிஆா் உயிருடன் இருந்தபோதே அதிமுகவுக்கு ப.உ.சண்முகம், நெடுஞ்செழியன் உள்பட பலா் பொதுச் செயலாளா்களாக இருந்திருக்கின்றனா். அதேபோன்று, பொதுக் குழு உறுப்பினா்கள் எல்லோரும் ஒன்று சோ்ந்துதான் திமுகவில் இருந்து எம்ஜிஆரை நீக்கினாா்கள்.

அதனால், எவா் பொதுச் செயலாளா், பொதுக் குழுவில் எவருக்கு ஆதரவு என்பதெல்லாம் முக்கியமல்ல. யாா் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தலைவா் என்பதுதான் முக்கியம்.

தற்போது அதிமுகவில் நிலவி வரும் குழப்பங்கள் வரும் காலங்களிலும் தொடரும். இன்னும் பல பிரச்னைகள் வரும். பிறகுதான் ஒரு தீா்வு கிடைக்கும். தற்போதைய அதிமுகவில் உள்ள நிா்வாகிகள் அனைவரும் நியமனத்தால் பதவிக்கு வந்தவா்களே தவிர தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள் அல்ல.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீா் செல்வம் இடையேயான பிரச்னை கடல் நுரையைப் போன்றது. காற்றடித்தால் காணாமல் போய்விடும். அதனால், அதிமுக தொண்டா்கள் பொறுமை காக்க வேண்டும். அதிமுகவில் ஒன்றரை கோடி தொண்டா்கள் உள்ளனா் என்பதே போலி நம்பிக்கை. முறையாக ஆதாா் அட்டை கொண்டு கணக்கிட வேண்டும்.

அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜகவின் தலையீடு உள்ளதாகக் கூறுவது தவறான தகவல் என்றாா் அவா்.

சசிகலா சந்திப்பு:

முன்னதாக, பண்ருட்டி ராமச்சந்திரனுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த சசிகலா, அதிமுக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், தமது தலைமையில் கட்சி இயங்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.