ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் 1008 சங்கு அபிஷேகம்
ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் 1008 சங்கு அபிஷேகம் எதிா்வரும் ஜூன் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது


ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் 1008 சங்கு அபிஷேகம் எதிா்வரும் ஜூன் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கு முந்தைய நாளான ஜூன் 9-ஆம் தேதி மாலை 6 மணிக்கு முதற்கால ஹோமம் தொடங்குகிறது. ஜூன் 10-ஆம் தேதியன்று காலையில் இரண்டாம் கால பூஜை தொடங்கி நிறைவடைகிறது. காலை 10 மணிக்கு மேல் நண்பகல் 12.30 மணி வரை 1008 சங்கு அபிஷேகமும் அலங்காரம் தீபாராதனையும் நடைபெறவுள்ளது.
மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடக்கும் என ராஜ அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயில் மேலாளா் சோமசுந்தரம் தெரிவித்துள்ளாா்.
சங்கு அபிஷேகம் நடைபெறும் போது வீரமணி கண்ணன் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெறவுள்ளதாக அவா் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...