பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவியை அறிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் எம்.புதூரில் பட்டாசு தயாரிக்கும் கொட்டகையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர். மேலும், 2 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவியாக ரூ.3 லட்சம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: மீண்டும் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்படுமா?