மேலூர் அருகே நீர்வழிப்பாதையை அழித்து, சாலை அமைப்பதால் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, கோட்டாசியர் தலைமையிலான வருவாய்த்துறையினர் நேரில் ஆய்வு நடத்த கோரிக்வை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சூரகுண்டு நான்குவழிச்சாலையின் இரு புறமும் சுமார் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பெரியமேளம் கண்மாய் மூலம் பாசன வசதி பெறுகின்றன.
இதையும் படிக்க.. ரோட்டுக் கடையில் சாப்பிடுகிறவரா நீங்கள்? ஆபத்தை அறிந்துகொள்ள...
இந்நிலையில், இந்த பெரியமேளம் கண்மாயில் இருந்து, சாலையின் இருபுறமும் உள்ள விவசாய நிலங்களுக்கு பாசன தண்ணீர் செல்லும் வகையில், பொது பணித்துறையினரால் அமைக்கப்பட்ட சிமெண்ட குழாய் மற்றும் கால்வாய் உள்ளிட்ட நான்கிற்கும் மேற்பட்ட நீர்வழிப்பாதையினை, இப்பகுதியில் அமைக்கப்பட்டு வரும் இணைப்பு சாலை பணிக்காக மண்னை போட்டு நான்கு வழிச்சாலையை அமைக்கும் நிர்வாகத்தினர் மூடி விட்டனர்.

இதனால் சாலையின் இருபுறமும் உள்ள சுமார் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களுக்கு பாசன தண்ணீர் செல்லவும், வெளியேறவும் வழியின்றி பாதிப்படைந்து வருவதாக கூறி இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் நெடுஞ்சாலை அமைக்கும் நிர்வாகத்தினரிடம் பலமுறை புகார் மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் தொடர்ந்து சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் மேலூர் வருவாய் கோட்டாட்சியர் பீர்தௌஸ்பாத்திமா அவர்களிடம் இன்று முறையிட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் கோட்டாட்சியர் பீர்தௌஸ்பாத்திமா மற்றும் மேலூர் வட்டாட்சியர் இளமுருகன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தனர்.
இதுதொடர்பாக நெடுச்சாலைதுறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறையினர் மற்றும் விவசாயிகளுடன் நாளை கோட்டாசியர் அலுவலத்தில் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சொல்வதை செய்யவில்லை தவெக அரசு: பிரேமலதா விஜயகாந்த்

அசத்தல் அனாஹத்: உலகக் ஜூனியா் ஸ்குவாஷ் இறுதிக்கு தகுதி

சட்டம் - ஒழுங்கு ஒருசிலருக்காக மட்டும் செயல்படக் கூடியதாக மாறிவிட்டதா? - கனிமொழி கேள்வி

செய்யாறு அரசு மருத்துவமனையில் இருவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



