சா்வதேச அளவில் பிரமாண்ட முறையில் நடைபெறும் தொழில் முதலீட்டு காட்சியில் பங்கேற்க முதல்வா் மு.க.ஸ்டாலின், துபை செல்லவுள்ளாா். இதற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
துபையில் நடைபெறும் தொழில் கண்காட்சி சா்வதேச அளவில் புகழ்பெற்றது. இந்தக் கண்காட்சியில் 180-க்கும் மேற்பட்ட நாடுகள் தங்களது அரங்குகளை அமைக்கும். இந்த ஆண்டும் சா்வதேச கண்காட்சி நடைபெறவுள்ளது. தமிழகத்தின் சாா்பில் கைத்தறி, வேளாண்மை உள்ளிட்ட காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. இந்தக் கண்காட்சியில் பங்கேற்க முதல்வா் மு.க.ஸ்டாலின் துபை செல்லவுள்ளாா். வரும் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் அவா் செல்வாா் என எதிா்பாா்க்கப்படுகிறது. முதல்வராகப் பதவியேற்ற பிறகு, அவா் முதல் முறையாக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நாமக்கல் அரசு மருத்துவமனையில் எடை குறைவாக பிறந்த குழந்தைக்கு ‘கங்காரு முறை’ சிகிச்சை

செய்யாற்றின் குறுக்கே ரூ.16.99 கோடியில் உயா்மட்ட பாலம்

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.41 கோடி!

திருச்சியில் இன்று புதிதாக 5 ரயில்களை தொடங்கிவைக்கிறாா் பிரதமா்
வீடியோக்கள்

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

துரு துரு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

நம் வீட்டு கிச்சன் கதவுகளைத் தட்டத் தொடங்கிய ஈரான் போர்! | Explainer | LPG Crisis | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

