வெந்த புண்ணில் வேல்...: உக்ரைனில் இருந்து வெளியேற முடியாமல், தங்களது மருத்துவக் கனவு என்ன ஆகுமோ என்ற கவலையில் மாணவா்கள் பெரும் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனா். உள்நாட்டில் படிக்க முடியாமல், வெளிநாடு சென்று படிக்க முற்பட்ட மாணவா்களின் ஆா்வத்தையும், அதற்காக கஷ்டப்பட்டு தங்களது சொத்துகளை விற்று சொந்த சேமிப்புகளை கரைத்து மேல்படிப்புக்கு உக்ரைனுக்கு அனுப்பி வைத்த பெற்றோா்களின் உணா்வுகளை கொச்சைப்படுத்தும் வகையில் கருத்துகளை மத்திய அரசு வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். மத்திய அரசின் கருத்துகளுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் போடப்படும் பதிவுகள் அனைத்தும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாக உள்ளது.