ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நீர்நிலை ஓடை பகுதியில் உள்ள விவசாய ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் வாழை குளம் கண்மாய் பகுதியில் உள்ள நீர் நிலை ஓடைகளில் உள்ள விவசாய ஆக்கிரமிப்புகளை மாவட்ட ஆட்சியர் உத்தரவு படி அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

News image
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அளவீடு செய்யப்பட்டு அகற்றப்பட்டன.
Updated On :27 மார்ச் 2022, 9:20 am

DIN

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் வாழை குளம் கண்மாய் பகுதியில் உள்ள நீர் நிலை ஓடைகளில் உள்ள விவசாய ஆக்கிரமிப்புகளை மாவட்ட ஆட்சியர் உத்தரவு படி அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் நீர்நிலை ஓடை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டுமென விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார். அதனடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் வாழை குளம் கண்மாய் பகுதியிலுள்ள நீர்நிலை ஓடை பகுதியில் உள்ள விவசாய ஆக்கிரமிப்புகளை கிராம நிர்வாக அதிகாரி மற்றும் சர்வேயர் ஆகியோரை கொண்டு நீர் நிலை பகுதிகளை அளவீடு செய்து விவசாய ஆக்கிரமிப்பை அகற்றினர்.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் ராமசுப்ரமணியன், மம்சாபுரம் வருவாய் ஆய்வாளர் ஜோதி, மம்சாபுரம் கிராம நிர்வாக அலுவலர் வேல்ராஜ் மற்றும் அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர் ஜேசிபி இயந்திரம் கொண்டும் விவசாய ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் கூறும்போது சுமார் 19 சென்ட் அளவுக்கு நீர்நிலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புக்கள அகற்றப்பட்டுள்ளன என தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.