நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

ரமலான் பண்டிகை: திருப்பூரில் 13,000 கிலோ பிரியாணி விற்பனை

ரமலான் பண்டிகையை ஒட்டி திருப்பூர் மாநகரில் உள்ள 60 கடைகளில் ஒரே நாளில் 13 ஆயிரம் கிலோ பிரியாணி விற்பனை செய்யப்பட்டுள்ளது.

News image

காங்கயம் சாலை பிரியாணிக் கடைகளில் நீண்ட வரிசையில் நின்றிருந்த வாடிக்கையாளர்கள்

Updated On :7 மே 2022, 5:10 pm IST

திருப்பூர்: ரமலான் பண்டிகையை ஒட்டி திருப்பூர் மாநகரில் உள்ள 60 கடைகளில் ஒரே நாளில் 13 ஆயிரம் கிலோ பிரியாணி விற்பனை செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் காங்கயம் சாலை, பெரியகடை வீதி ஆகிய பகுதிகளில் 60 பிரியாணிக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளில் தீபாவளி, பொங்கல், ரமலான், பக்ரீத், கிறிஸ்துமஸ் ஆகிய பண்டிகைகளுக்கு அதிக அளவிலான பிரியாணிகள் விற்பனை செய்யப்படுவது வழக்கம்.

இந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக கரோனா நோய்த் தொற்று காரணமாக பிரியாணி விற்பனையும் சற்று மந்தமாகவே இருந்தது. இந்த நிலையில், கரோனா நோய்த் தொற்று பரவல் குறையத் தொடங்கியதைத் தொடர்ந்து அனைத்து கடைகளிலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகரித்து காணப்படுவது வழக்கம்.

Story image

அந்தவகையில், திருப்பூரில் இஸ்லாமியர்கள் அதிக அளவில் இருக்கும் காங்கயம் சாலையில் உள்ள அனைத்து பிரியாணிக் கடைகளிலும் செவ்வாய்க்கிழமை அதிகாலை 10 மணி முதலே கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.

இதில், ஒரு சில கடைகளில் டோக்கன் விநியோகிக்கப்பட்டு குறைந்த அளவிலான வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதித்தனர். மேலும், ஒரு சில கடைகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்த வாடிக்கையாளர்கள் பிரியாணிகளை கிலோ கணக்கில் வாங்கிச் சென்றனர். இதன் காரணமாக காங்கயம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள பிரியாணிக்கடைகளின் முன்பாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்

திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள பிரியாணிக்கடைகளின் முன்பாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்

இதுகுறித்து பிரியாணி கடை உரிமையாளர்கள் கூறுகையில்,

காங்கயம் சாலை, பெரிய கடை வீதிளில் உள்ள பிரியாணி கடைகளில் வார நாள்களில் 3 டன் வரையிலும், ஞாயிற்றுக்கிழமைகளில் 4 டன் வரையிலும் பிரியாணி விற்பனை நடைபெறும். ஆனால் தற்போது ரமலான் பண்டிகையை ஒட்டி ஒரே நாளில் 13 டன் பிரியாணி விற்பனை நடைபெற்றுள்ளது. மேலும், சில கடைகள் அடைக்கப்பட்டு ஆர்டரின் பேரில் மொத்தமாக பிரியாணி விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.