கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பட்டணப் பிரவேசத்தை எதிர்க்கிறேன்: சீமான்

பட்டணப் பிரவேசத்தை அரசே அனுமதித்தாலும் தான் அதை எதிர்ப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :9 மே 2022, 11:54 am

DIN

பட்டணப் பிரவேசத்தை அரசே அனுமதித்தாலும் தான் அதை எதிர்ப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றின் விசாரணைக்காக வந்தார். அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் எனக்கும் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. அண்ணன் தம்பிக்குரிய பாசம் என்றும் உள்ளது. திமுக நிறைய வாக்குறுதிகள் அளித்து ஆட்சிக்கு வந்தது. ஆனால் இன்று 10 மணிநேர மின் தடை நிலவுகிறது. அதனைச் சரி செய்வதற்கு ஏதாவது நடவடிக்கையைத் திமுக அரசு எடுத்துள்ளதா? 

பட்டிண பிரவேசம் நிகழ்வில் ஆதீனங்கள் போராட்டம் நடத்துவதற்கு முன்பே திமுக அரசு அனுமதி வழங்கிவிட்டது. அதைப்போலவே மதுரையில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்தார்கள் என்பதற்காக மருத்துவக் கல்லூரி துணைவேந்தரை நீக்கிவிட்டு பிறகு மீண்டும் சேர்த்தார்கள். இவையெல்லாம் தில்லி மேலிட உத்தரவுக்கு ஏற்ப திமுக அரசு நடத்தும் நாடகங்கள்தான். முதல்நாள் ஒன்று அறிவித்துவிட்டு மறுநாள் அதை மாற்றி அறிவிப்பது தான் திராவிட மாடல். எனவே அரசே பல்லக்கு தூக்குவதை அனுமதித்தாலும் நாங்கள் அதனை ஏற்கவில்லை. எதிர்க்கிறோம். 

இந்து மதத்தில் சாதிகளே கிடையாது என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறுவது வேடிக்கையானது. உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாத சாதியக் கட்டுமானம் அடர்த்தியாக உள்ளது இந்தியாவில்தான். அதிலும் சாதியும் மதமும் இரண்டு கண்களாக கொண்டிருப்பது இந்து மதம் தான். அவரவர், அவரவர் தாய்மொழிமேல் உறுதியாக இருக்கிறார்கள். நாங்கள் எங்கள் தாய் மொழியில் உறுதியாக இருப்போம். உலகத்தின் தொன்மையான மொழி என்று பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால் அதற்கு என்ன முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.