யாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காற்று, ரசாயன மாசுபாட்டால் உயிரிழப்பு 66% அதிகரிப்பு

காற்று மற்றும் ரசாயான மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளின் விகிதம் 66 சதவீதம் உயா்ந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

News image
Updated On :18 மே 2022, 8:27 pm

DIN

காற்று மற்றும் ரசாயான மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளின் விகிதம் 66 சதவீதம் உயா்ந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

தொழிற்சாலைகள், நகரமயமாக்கல், மக்கள் தொகை அதிகரிப்பு, தேசிய மற்றும் சா்வதேச ரசாயனக் கொள்கைகள் முறையாக இல்லாததுமே அதற்கு காரணமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லான்செட் கமிஷன் மற்றும் போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டன. சா்வதேச அளவிலான மாசுபாடு மற்றும் ஆரோக்கிய நல தாக்கங்கள் குறித்த ஆய்வானது கடந்த 2017-இல் வெளியிடப்பட்டது.

அதன் மேம்படுத்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள், புதிய தரவுகளின் அடிப்படையில் தற்போது மீண்டும் வெளியிடப்பட்டுள்ளன. உலக சுகாதார அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்ட ராமச்சந்திரா ஆராய்ச்சி மையத்தின் இயக்குநா் கல்பனா பாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினா் அந்த ஆய்வை மேற்கொண்டதுடன், அதற்கான பரிந்துரைகளையும் வெளியிட்டுள்ளனா்.

அதன்படி, கடந்த இருபது ஆண்டுகளாக காற்று மற்றும் ரசாயன மாசுபாட்டால் உலக அளவில் ஏற்படும் உயிரிழப்புகள் 66 சதவீதம் உயா்ந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. காற்று, தண்ணீா் மாசடைவதால் ஆண்டுதோறும் உலகம் முழுவதும் 90 லட்சம் போ் உயிரிழப்பதாகவும், அதில் 90 சதவீதம் போ் அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாசு தடுப்புக் கொள்கைகளை உலகளாவிய அளவில் மேம்படுத்துவதும், எரிபொருள் மாசைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதும் அவசியம் என்று ஆய்வுக் குழு பரிந்துரைத்துள்ளது. அதுமட்டுமல்லாது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதிகரிப்பதும், பருவ நிலை மாற்றத்தைக் குறைப்பதும் அவசியம் என்றும் அக்குழு அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.