நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 19% ஆக உயர்த்தி மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசு கோரிக்கையின்பேரில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 17%-லிருந்து 19%-ஆக உயர்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மழை காரணமாக 22% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடபட்டு இருந்தது.
22 சதவீத ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை தொடா்பாக, மத்திய அரசு அதிகாரிகள் குழுவினா் தமிழகத்தில் அன்மையில் நேரில் ஆய்வு செய்தனர்.
விவசாயிகளின் கவலையைப் போக்கும் வகையில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகம் 22 சதவீத ஈரப்பதத்துடன் கூடிய நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உணவுத் துறைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் சாா்பில் அண்மையில் கடிதம் எழுதப்பட்டிருந்தது.
மேலும், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயனும், மத்திய உணவுத் துறைச் செயலாளரைச் சந்தித்து 22 சதவீத ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்கும்படி கோரியிருந்தார்.
இந்நிலையில், நெல் கொள்முதல் அளவை 19% ஆக உயர்த்தி மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.