தேர்தல் வாக்குறுதிகள் எதையும் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை: எடப்பாடி பழனிசாமி

திமுக தேர்தல் வாக்குறுதிகள் எதையும் இதுவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 
தேர்தல் வாக்குறுதிகள் எதையும் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை: எடப்பாடி பழனிசாமி
Published on
Updated on
1 min read


திருப்பூர்: திமுக தேர்தல் வாக்குறுதிகள் எதையும் இதுவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

பொள்ளாச்சி, வால்பாறையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகளின் இல்ல நிகழச்சிகளில் கலந்துகொள்வதற்காக திருப்பூர் மாவட்டம் அவினாசி, மங்கலம் வழியாக பொள்ளாச்சி வந்தார். அவருக்கு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

அப்போது தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டு உங்கள் பகுதிக்கு முதன்முறையாக வந்துள்ளேன். எவ்வளவோ தடைகளை தாண்டி அதிமுக தொண்டர்கள் ஆதரவோடு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக விவசாயியான நான் பொறுப்பேற்றது விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி. 

விவசாயிகளுக்கு முழு சுதந்திரம் அளித்த அரசு அதிமுக அரசு. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்தியது. அதிமுக அரசு கொண்டு வந்த திட்டம் என்பதால் அவிநாசி-அத்திக்கடவு திட்ட பணிகள் நிறைவேற்றப்படாமல் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி அமைந்திருந்தால் தற்போது அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கும். 

ஒரு சொட்டு குடிநீர் கூட வீணாக்கப்படாமல் இருப்பதற்காகத்தான் குடிமராமத்து பணிகள் கொண்டுவரப்பட்டது. ஆனால், அதுவும் தற்போது நடைபெறவில்லை. இந்த அறிவிப்பு தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்தது. ஆனால், தற்போது வரை திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகள் எதையும் இதுவரை நிறைவேற்றவில்லை என பழனிசாமி கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com