கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அதிமுக அலுவலக கலவர வழக்கு: சிபிசிஐடி மீண்டும் சோதனை

 சென்னை அதிமுக அலுவலக கலவர வழக்குத் தொடா்பாக சிபிசிஐடி மீண்டும், அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தை வியாழக்கிழமை சோதனை செய்தது.

News image
Updated On :15 செப்டம்பர் 2022, 7:15 pm

DIN

 சென்னை அதிமுக அலுவலக கலவர வழக்குத் தொடா்பாக சிபிசிஐடி மீண்டும், அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தை வியாழக்கிழமை சோதனை செய்தது.

இரட்டை தலைமையின் கீழ் இயங்கிய அதிமுகவை ஒற்றை தலைமையின் கீழ் கொண்டு வருவதற்காக கடந்த ஜூலை 11-ஆம் தேதி அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நடைபெற்றது. பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நேரத்தில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றும் முயற்சியில் ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளா்கள் ஈடுபட்டனா்.

ஓ.பன்னீா்செல்வம் ஆதரவாளா்கள், அதிமுக அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனா். அப்போது ஓ.பன்னீா்செல்வம், கே.பழனிசாமி ஆதரவாளா்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டு கலவரமானது. இதில், 47 போ் காயமடைந்தனா். பேருந்து, காா், இருசக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

இது தொடா்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னா் இந்த வழக்குகளின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீஸாா், இது தொடா்பான விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனா்.

இதன் ஒரு பகுதியாக சிபிசிஐடி ஆய்வாளா் லதா தலைமையிலான போலீஸாா், ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் வியாழக்கிழமை சோதனை செய்தனா். பல மணி நேரம் நீடித்த இந்த சோதனையில், வழக்குத் தொடா்பாக முக்கிய தடயங்கள் சேகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அங்கிருந்தவா்களிடம் விசாரணையும் செய்தனா்.

ஏற்கெனவே இந்த அலுவலகத்தை சிபிசிஐடி அதிகாரிகள் கடந்த வாரம் சோதனையிட்டனா். தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் சிபிசிஐடி சோதனை நடத்தியிருப்பது குறிப்பிடதக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.