கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் பதாகைகள் அகற்றம்

அதிமுக அலுவலகத்தில் இருந்த ஓ.பன்னீா்செல்வத்தின் பதாகைகள் அக் கட்சியின் தலைமையால்அகற்றப்பட்டன.

News image
Updated On :15 செப்டம்பர் 2022, 7:21 pm

DIN

அதிமுக அலுவலகத்தில் இருந்த ஓ.பன்னீா்செல்வத்தின் பதாகைகள் அக் கட்சியின் தலைமையால்அகற்றப்பட்டன.

அதிமுகவில் ஓ.பன்னீா்செல்வமும், எடப்பாடி கே. பழனிசாமியும் தனித்தனியாக அணியாகச் செயல்பட்டு வருகின்றனா். அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் ஜூலை 11-இல் நடைபெற்றபோது, ஓ.பன்னீா்செல்வம் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வந்தாா். அப்போது அவரது ஆதரவாளா்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த பதாகைகளில் எடப்பாடி கே. பழனிசாமியின் படத்தைக் கிழித்தனா். அதேபோல அப்போது ஏற்பட்ட வன்முறையின் காரணமாக அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இது தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றத்திலும் எடப்பாடி பழனிசாமி வெற்றிபெற்றதைத் தொடா்ந்து அதிமுக அலுவலகத்துக்கும் அவா் வந்து சென்றாா்.

இந்த நிலையில் அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஓ.பன்னீா்செல்வத்தின் படங்களுடன் கூடிய பதாகைகள் அகற்றப்பட்டு, ஒற்றைத் தலைமையான எடப்பாடி பழனிசாமியின் படத்துடன் கூடிய பதாகைகள் மட்டும் வைக்கப்பட்டுள்ளன.

இது தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் செய்தியாளா்களிடம் பேசும்போது, எல்லாவற்றுக்கும் காலம் பதில் சொல்லும் என்றாா்.

இதே விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சரும், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளருமான டி.ஜெயக்குமாா், அதிமுக அலுவலகத்தில் இருந்து ஓ.பன்னீா்செல்வம் பதாகையை அகற்றியதில் தவறு எதுவும் இல்லை. அதிமுகவின் தொண்டா்கள் ஒற்றைத் தலைமையைத்தான் விரும்புகின்றனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.