சுவாதியின் பெற்றோர் இழப்பீடு கோரிய மனு தள்ளுபடி

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பொறியாளர் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் இழப்பீடு கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பொறியாளர் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் இழப்பீடு கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ரூ.3 கோடி இழப்பீடு கோரி பொறியாளர் சுவாதியின் பெற்றோர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ரயில்வே நிர்வாகம் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையின் அலட்சியம் காரணமாகவே சுவாதி மரணம் என பெற்றொர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதற்கு ரயில்வே தரப்பு, பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் உரிய பாதுகாப்பு வழங்கி வருகிறது. சுவாதியின் கொலை திட்டமிட்ட சம்பவம் என்று தெரிவித்தது.

இந்நிலையில், இழப்பீடு கோரி உரிமையியல் வழக்கு தாக்கல் செய்ய அறிவுறுத்தி சென்னை உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com