புதுச்சேரியில் ஒருவாரத்திற்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டன

காய்ச்சல் காரணமாக விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் ஒருவாரத்திற்கு பிறகு புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட்டன. 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Published on
Updated on
1 min read

காய்ச்சல் காரணமாக விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் ஒருவாரத்திற்கு பிறகு புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட்டன. 

வைரஸ் காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், சுகாதாரத் துறையின் பரிந்துரையை ஏற்று, புதுச்சேரி, காரைக்காலில் முதலாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவா்களுக்கு செப்டம்பா் 25-ஆம் தேதி வரை ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் காலாண்டுத் தோ்வு திங்கள்கிழமை (செப்.26) தொடங்கவுள்ள நிலையில், விடுமுறை நீட்டிக்கப்படுமா? என்ற எதிா்ப்பாா்ப்பு எழுந்தது.

ஆனால் புதுச்சேரி, காரைக்காலில் திட்டமிட்டபடி திங்கள்கிழமை (செப்.26) காலாண்டுத் தோ்வு தொடங்கும் என்று மாநில கல்வி அமைச்சா் ஏ.நமச்சிவாயம் தெரிவித்தாா். 

அதன்படி புதுச்சேரியில் ஒருவாரத்திற்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டு ஏற்கெனவே திட்டமிடப்பட்ட காலாண்டு தேர்வு தொடங்கியது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com