'மீரா மிதுனை கைது செய்ய முடியவில்லை': காவல் துறை

நடிகை மீரா மிதுனை கைது செய்ய முடியவில்லை என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

நடிகை மீரா மிதுனை கைது செய்ய முடியவில்லை என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை மீரா மிதுன் தலைமறைவாகி அடிக்கடி தங்குமிடத்தை மாற்றி வருவதால் அவரை கைது செய்ய முடியவில்லை என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

பட்டியலினத்தவர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து வெளியிட்டதாக நடிகை மீரா மிதுன் மீது தொடர்ந்த வழக்கில், காவல் துறை தகவல் தெரிவித்துள்ளது.

மீரா மிதுன் தலைமறைவான நிலையில் அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தரப்பு விளக்கம் அளித்துள்ளது. 2 மாதங்களுக்கு மேல் பிடிவாரண்ட் நிலுவையில் உள்ள நிலையில் கைது செய்யாததால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிருப்தி அடைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com