எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் திங்கள்கிழமை கைது செய்தனர்.
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து 9 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, அவர்களின் படகை பறிமுதல் செய்த இலங்கை கடற்படையினர் அனைவரையும் கைது செய்தனர்.
தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 9 மீனவர்களையும் திரிகோணமலை கடற்படை தளத்திற்கு கொண்டு சென்றனர்.