காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை(கோப்புப்படம்)
மேட்டூர் அணை(கோப்புப்படம்)
Published on
Updated on
1 min read

காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து அதிகளவில் உபரிநீர் திறக்க வாய்ப்புள்ளதால் காவிரி கரையோரம் வசிப்போர் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

50,000 கனஅடி வரை உபரிநீர் திறக்க வாய்ப்புள்ளதால் காவிரி கரையோரம் வசிப்போர் பாதுகாப்பாக இருக்க நீர்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

அணையில் இருந்து வெளியேற்றப்ப்டும் நீரின் அளவு எந்த நேரத்திலும் அதிகரிக்கப்படலாம் என்பதால் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு 11 மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com