சென்னை: பிரபல திரைப்பட இயக்குநர் மணிரத்னத்துக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா உறுதியானதையடுத்து இயக்குநர் மணிரத்னம் சென்னை உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், பிரபு, ரகுமான், பாபு ஆண்டனி, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா லக்ஷ்மி என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளனர்.
இதையும் படிக்க: தி லெஜண்ட்: புதிய விடியோ பாடல் வெளியானது
பொன்னியின் செல்வன் பட வெளியீட்டு பணிகளில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில், இயக்குநர் மணிரத்னத்துக்கு கரோனா தொற்று உறிதியாகியுள்ளது.