வண்டலூர், கிண்டி பூங்காக்கள் இன்று மூடல்

சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க நாளையொட்டி, வண்டலூா் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா இன்று வியாழக்கிழமை மூடப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்கா
வண்டலூர் உயிரியல் பூங்கா

சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க நாளையொட்டி, வண்டலூா் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா இன்று வியாழக்கிழமை மூடப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

44-ஆவது சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் இன்று முதல் நடைபெறவுள்ளது. இந்த போட்டியை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் தொடக்க விழாவின் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை தொடங்கி வைக்கிறார்.

இதையொட்டி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்கா மற்றும் கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா வியாழக்கிழமை செயல்படாது என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதற்குப் பதிலாக ஆகஸ்ட் 2-ஆம் தேதி பூங்காக்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com