இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

காலமானார் எழுத்தாளர் கு.சின்னப்ப பாரதி

நாமக்கல்லைச் சேர்ந்த முற்போக்கு எழுத்தாளரான கு.சின்னப்ப பாரதி(88) உடல்நலக்குறைவால் திங்கள்கிழமை காலமானார்.

News image
கு.சின்னப்ப பாரதி
Updated On :13 ஜூன் 2022, 1:55 pm

DIN

நாமக்கல்: நாமக்கல்லைச் சேர்ந்த முற்போக்கு எழுத்தாளரான கு.சின்னப்ப பாரதி(88) உடல்நலக்குறைவால் திங்கள்கிழமை காலமானார்.

இவர், கம்யூனிஸ சித்தாந்தங்களை உள்ளடக்கி, தாகம், சங்கம், சர்க்கரை, பவளாயி, தலைமுறை மாற்றம், சுரங்கம், பாலை நில ரோஜா ஆகிய ஏழு நாவல்களை எழுதி உள்ளார்.

இதில் 'சுரங்கம்' நாவல் அவருக்கு புகழைப் பெற்றுத் தந்தது. நிலக்கரிச் சுரங்கங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் வாழ்வியலை அவர்களுடன் தங்கியிருந்து நாவலாக வடித்தார்.

சின்னப்ப பாரதியின் நாவல்கள் ஆங்கிலம், பிரெஞ்சு, டேனிஷ், சிங்களம், உஷ்பேக், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, குஜராத்தி, வங்காளம், மராட்டி, சமஸ்கிருதம் உள்ளிட்ட 13 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு இலக்கியப் பயணங்களுக்காக சென்று வந்துள்ளார். இலங்கை முற்போக்கு வட்டம் வழங்கிய விருது, தில்லி தமிழ்ச்சங்க விருது, கோவை உலகத் தமிழ் பண்பாட்டு மையம் வழங்கிய பொற்கிழி விருது, மறைந்த முதல்வர் மு.கருணாநிதி வழங்கிய பொற்கிழி விருது உள்பட பல்வேறு விருதுகள் தமிழ் அமைப்புகளால் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

நாமக்கல்-மோகனூர் சாலை, முல்லை நகர் பெந்தகோஸ்த் தேவாலயம் அருகில் மனைவி செல்லம்மாளுடன் வசித்து வந்த கு.சின்னப்ப பாரதி கடந்த சில வாரங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் திங்கள்கிழமை பிற்பகல் 6.10 மணியளவில் உயிரிழந்தார். இவருக்கு பாரதி, கல்பனா ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.

மறைந்த சின்னப்ப பாரதியின் உடல் நாமக்கல் மின் மயானத்தில் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்பட உள்ளது.

தொடர்புக்கு: 94422-64733.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.